Thursday, November 3, 2011

மந்திரங்கள் (சக்தி, கணபதி, சரஸ்வதி)


சக்தி மந்திரம்

ஓம் தேஜோஸி தேஜோ மயி தேஹி
         வீா்யமஸி வீா்யம் மயி தேஹி
         பலமஸி பலம் மயி தேஹி
         ஓஜோஸி ஓஜோ மயி தேஹி
        மன்யுரஸி மன்யும் மயி தேஹி
        ஸஹோஸி ஸஹோ மயி தேஹி ஓம்

இறைவா! நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.
நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய், எனக்கு ஒழுக்கத்தைத் தருவாய்.
நீ உடல் சக்தியாக இருக்கிறாய், எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.
நீ தெய்வீக சக்தியாக இருக்கிறாய், எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய்.
நீ தைரியமாக இருக்கிறாய், எனக்கு தைரியத்தைத் தருவாய்.
நீ பொறுமையாக இருக்கிறாய், எனக்கு பொறுமையைத் தருவாய்.

கணபதி மந்திரம்

ஓம் கணானாம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே
க்விம் கவீனா முபமச்ரவஸ்தமம். ஜ்யேஷ்ட்டராஜம்
ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந ச்ருண்வன்
னூதிபிஸ்ஸீத ஸாதனம் மஹா கணபதயே நம ஓம்.

தேவா் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே! உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞா்களுள் பேரறிஞா், ஒப்பற்ற புகழ் படைத்தவர், முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர், வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிரார்தனைகளைக் கேட்டு எங்களைக் காப்பதற்காக விரைந்து வந்தருள்வீராக.  மகா கணபதியாகிய உமக்கு நமஸ்காரம்.

சரஸ்வதி மந்திரம்

ஓம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ
தீனாமவித்ர்யவது ஓம்.

வணங்குவோரைக் காப்பவளான சரஸ்வதி தேவி நம்மைக் காக்கட்டும்.
வாக்கு சக்திகளைத் தூண்டி அவள் நம்மை விழத்தெழச் செய்வாளாக.

No comments:

Post a Comment