Sunday, January 17, 2010

தேனினும் இனிய திருவாசகம்


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
--------
திருவாசகச் சிறப்புப் பாயிரம்
---------
(நேரிசை வெண்பா)


தொல்லை யிருப்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவா சகமென்னுந் தேன்.


(பதவுரை) எல்லை மருவா - முடிவு பெறாத நெறி அளிக்கும் - வீட்டின்ப நெறியைத் தருகின்ற எங்கோன் - திருவாதவூரின் கண்ணே பிறந்த எங்கள் தலைவனாகிய மாணிக்கவாச அடிகள் திருவாசகம் என்னுந் தேன் - பாடியருளிய திருவாசகம் என்று கூறப்பட்ட தேன்.