Monday, September 19, 2011

அப்யாரோஹ மந்திரம் & மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்


அப்யாரோஹ மந்திரம் &  மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்

அப்யாரோஹ மந்திரம்

(அப்யாரோஹ என்றால் உயர்தல் என்று பொருள். அதாவது இம் மந்திரத்தை ஜெபிப்பவரின் நிலையை உயர்த்துகிறது இந்த மந்திரம்.)


ஓம் அஸதோ மா ஸத்கமய
          தமஸோ மா ஜ்யோதிர் கமய
          ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம்

ஸத் - உண்மை, அஸத் - உண்மையற்ற, தமஸ - இருள், மா - என்னை, ஜ்யோதி - ஒளி, கமய - அழைத்துச் செல், ம்ருத்யு -  மரணம், அம்ருதம் - மரணமில்லாத

பொருள்
உண்மையற்ற நிலையில் இருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக.  அறியாமை என்ற இருளில் இருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக.  மரணத்தில் இருந்து என்னை மரணமில்லா பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக.

மஹா ம்ருத்யுஞ்சஜய மந்திரம்

(ம்ருத்யுஞ்ஜய என்றால் மரணத்தை ஜெயிப்பது என்று பொருள். அதாவது மரணத்தை வெல்வதற்கான மந்திரம் என்று இம்மந்திரம் அழைக்கப்படுகிறது. மேலும் வெளியே செல்லும் போது இம்மந்திரத்தை ஓதுவதால் விபத்துகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் என்று கூறப்படுகிறது.)

ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்ட்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் ஓம்.

ஸுகந்திம் - நறுமணம் கமழ்பவர், புஷ்டி வர்த்தனம் - உணவூட்டி வளர்ப்பவர், த்ர்யம்பகம் - மூன்று கண்கள் உடையவர், யஜாமஹே - போற்றி வழிபடுகிறோம், உர்வாருகம் இவ - வெள்ளரிப் பழம், ம்ருத்யோ - மரணம், பந்தனாத் - பிடியிலிருந்து, முஷீய - விடுபடுவோமாக, அம்ருதாத் - ஆன்மநிலையிலிருந்து.

பொருள்

நறுமணம் கமழ்பவரும், உலக உயிர்களை உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண் உடையவரும் ஆகிய சிவபெருமானைப் போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல மரணத்தின் பிடியில் இருந்து விடுபடுவோமாக.  நமது ஆன்ம நிலையில் இருந்து நாம் விலகாமல் இருப்போமாக. 

No comments:

Post a Comment