Thursday, September 15, 2011

காயத்ரீ மந்திரம்


ஓம்
பூா் புவஸ்ஸுவ
தத் ஸ விதுா் வரேண்யம்
பா்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந 
ப்ரசோதயாத்
ஓம்

பொருள்
ஓம் - ப்ரணவ மந்திரம், பூா் புவ ஸுவ - மூன்று உலகங்கள், ய - யார்,  ந - நமது, திய - புத்தி, ப்ரசோதயாத் - தூண்டுபவர், ஸவிது - அனைத்தையும், தத் - அந்த, தேவஸ்ய - தெய்வத்தின், வரேண்யம் - சிறந்த, பா்க் - ஒளி வடிவம், தீமஹி - தியானிப்போம்.

விளக்கவுரை
ஓம் என்ற ப்ரணவ மந்திரமாகவும், பூ (பூமி), புவ (முன்னோர் வாழும் உலகம்), ஸுவ (தேவர்கள் வாழும் உலகம்) ஆகிய உலகங்களாகவும், அதில் இருக்கின்ற யார் நமது புத்தியை (அறிவினை) தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவை தியானிப்போம்.

இதில் பூ,புவ, ஸுவ என்ற மூன்றும் பூலோகம், பித்ருக்கள் (முன்னோர்கள்) வாழும் உலகம், சுவா்க்கலோகம் என்ற மூன்று உலகங்களை ஸ்தூல நிலையில் (பரு நிலையில்) குறிக்கின்றன. நமது சூட்சும நிலையில் (நுண் நிலையில்) நமது உணர்வின் மூன்று தளங்கள் அதாவது உடல், மனம், உயிர் ஆகிய மூன்று நிலைகளைக் குறிக்கின்றது.

No comments:

Post a Comment